வரலாற்றில் இன்று – 06.07.2023

சூலை 6 (July 6) கிரிகோரியன் ஆண்டின் 187 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 188 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 178 நாட்கள் உள்ளன.

📌 இன்றைய தின நிகழ்வுகள்

1044 – புனித ரோமப் பேரரசன் மூன்றாம் என்றி அங்கேரி மீது படையெடுத்தான்.

1189 – முதலாம் ரிச்சார்டு இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1348 – கறுப்புச் சாவுக்குக் காரணமான யூதர்களைப் பாதுகாப்பதற்கான ஆணை ஓலையையை திருத்தந்தை ஆறாம் கிளெமெண்டு வெளியிட்டார்.

1411 – தனது மூன்றாவது செல்வம் தேடும் பயணத்தை முடித்துக் கொண்டு நாஞ்சிங் திரும்பிய மிங் சீனத் தளபதி செங் ஹே, தனது பயணத்தின் போது இலங்கையில் மிங்-கோட்டைப் போரில் கைது செய்த இலங்கை மன்னன் அழகக்கோனை யொங்கில் பேரரசரிடம் ஒப்படைத்தார்.

1483 – மூன்றாம் ரிச்சார்டு இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.

1484 – போர்த்துக்கீச மாலுமி டியாகோ காவோ கொங்கோ ஆற்றின் வாயிலைக் கண்டார்.

1535 – சேர் தாமஸ் மோர் நாட்டுத் துரோகத்துக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரினால் தூக்கிலிடப்பட்டார்.

1557 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் கணவர் எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னர் பிரான்சுடன் போர் புரிவதற்காக டோவர் துறையில் இருந்து புறப்பட்டார். மேரி தனது கணவரைப் பின்னர் பார்க்கவில்லை.

1630 – முப்பதாண்டுப் போர்: நான்காயிரம் சுவீடன் படைகள் குசுதாவசு அடால்பசு தலைமையில் செருமனியின் பொமிரானியா நகரை அடைந்தன.

1854 – ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முதலாவது மாநாடு மிச்சிகனில் நடைபெற்றது.

1885 – பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்ச்சர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை வெறிநாய்க்கடியினல் நோய் வாய்ப்பட்ட 9 வயது யோசப் மைசிட்டர் என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.

1892 – தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1917 – முதலாம் உலகப் போர்: அரபுக் கிளர்ச்சியின் போது அராபியப் படைகள் லாரன்சு தலைமையில் அக்காபாவை உதுமானியரிடம் இருந்து கைப்பற்றினர்.

1935 – சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.

1939 – நாட்சி ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

1941 – செருமானிய இராணுவம் சிமோலியென்சுக்கின் அருகில் சோவியத் இராணுவத்தினரை சிற்றி வளைத்தன.

1944 – அமெரிக்காவில் ஹார்ட்பர்ட் நகரில் கழைக்கூத்து அரங்கில் இடம்பெற்ற பெரும் தீயில் சிக்கிய 168 பேர் உயிரிழந்தனர், 700 பேர் வரை காயமடைந்தனர்..

1947 – சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கிகளைத் தயாரிக்க ஆரம்பித்தது.

1956 – சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.

1962 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமாராம தேரர் என்ற பௌத்தத் துறவி தூக்கிலிடப்பட்டார்.

1964 – மலாவி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1966 – மலாவி குடியரசாகியது. ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டா அதன் முதல் அரசுத்தலைவரானார்.

1967 – நைசீரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1975 – கொமொரோசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1988 – வட கடலில் எண்ணெய் அகழ்வு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 167 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1989 – டெல் அவீவ்–எருசலேம் பேருந்து ஒன்றைக் கைப்பற்றிய பாலத்தீன இசுலாமிய ஜிகாத் உறுப்பினர் ஒருவர் அதனை குன்று ஒன்றின் மீது மோத வைத்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – 44 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சீனப் போரின் போது மூடப்பட்ட சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நாதூ லா கணவாய் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

2013 – நைஜீரியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

2013 – போயிங் 777 விமானம் சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர், 181 பேர் காயமடைந்தனர்.

2013 – கனடாவின் கியூபெக்கில் எண்ணெய்த் தொடருந்து ஒன்று தடம் புரண்டு வெடித்ததில் 47 பேர் உயிரிழந்தனர், நகரின் மத்திய பகுதியில் 30 கட்டடங்கள் சேதமடைந்தன.

📌 இன்றைய தின பிறப்புகள்

1781 – இசுடாம்போர்டு இராஃபிள்சு, ஆங்கிலேய அரசியல்வாதி, சிங்கப்பூரை நிறுவியவர் (இ. 1826)

1832 – முதலாம் மாக்சிமிலியன், மெக்சிக்கோ பேரரசர் (இ. 1867)

1837 – ராம்கிருட்டிண கோபால் பண்டார்கர், இந்தியக் கீழ்த்திசை மொழிப்புலமையாளர் (இ. 1925)

1870 – பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (இ. 1903)

1901 – சியாமா பிரசாத் முகர்ஜி, மேற்கு வங்க அரசியல்வாதி (இ. 1953)

1907 – பிரிடா காலோ, மெக்சிக்கோ ஓவியர், கல்வியியலாளர் (இ. 1954)

1921 – நான்சி ரேகன், அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் 42வது முதல் பெண்மணி (இ. 2016)

1930 – எம். பாலமுரளிகிருஷ்ணா, கருநாடக இசைப் பாடகர் (இ. 2016)

1932 – பூ. கணேசலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1935 – டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)

1935 – ஆர். சண்முகம் மலேசிய எழுத்தாளர்

1937 – மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் 5வது சனாதிபதி (இ. 2014)

1940 – நுர்சுல்தான் நசர்பாயெவ், கசக்ஸ்தானின் 1வது சனாதிபதி

1946 – ஜார்ஜ் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 43வது அரசுத்தலைவர்

1946 – சில்வெஸ்டர் ஸ்டாலோன், அமெரிக்க நடிகர்

1975 – 50 சென்ட், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்

1979 – கெவின் ஹார்ட், அமெரிக்க நடிகர்

1980 – இவா கிரீன், பிரெஞ்சு நடிகை

1981 – நிகிதா துக்ரல், இந்திய நடிகை

1985 – ரன்வீர் சிங், இந்திய நடிகர்

📌 இன்றைய தின இறப்புகள்

1476 – இரெகியோமோண்டேனசு, செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1436)

1535 – தாமஸ் மோர், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1478)

1553 – ஆறாம் எட்வர்டு, இங்கிலாந்து, அயர்லாந்து மன்னர் (பி. 1537)

1614 – மான் சிங், ராஜ்புத் அரசர் (பி. 1550)

1827 – தோமஸ் முன்ரோ, சென்னை மாகான ஆளுநர் (பி. 1761)

1854 – ஜார்ஜ் ஓம், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1789)

1893 – மாப்பசான், பிரான்சிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1850)

1902 – மரியா கொரெற்றி, இத்தாலியப் புனிதர் (பி. 1890)

1962 – வில்லியம் பால்க்னர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1897)

1968 – மயிலை சிவ முத்துக்குமாரசுவாமி, தமிழறிஞர், தமிழாசிரியர் (பி. 1892)

1971 – லூயிசு ஆம்சுட்ராங், அமெரிக்கப் பாடகர் (பி. 1901)

1985 – மௌனி, தமிழக எழுத்தாளர் (பி. 1907)

1986 – ஜெகசீவன்ராம், இந்திய அரசியல்வாதி (பி. 1908)

2002 – திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (பி. 1932)

2005 – கிளாட் சிமோன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1913)

2011 – கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1932)

📌இன்றைய தின சிறப்பு நாள்

விடுதலை நாள் (கொமொரோசு, பிரான்சிடம் இருந்து 1975)

விடுதலை நாள் (மலாவி, பிரித்தானியாவிடம் இருந்து 1964)

ஆசிரியர் நாள் (பெரு)

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.