சிக்கல்கள் இல்லாவிட்டால்.

சிக்கல்கள் இல்லாத மனிதர்களே இல்லை. சிக்கல் இல்லாத வாழ்க்கையும் இல்லை. அதேபோல தீர்வுகள் இல்லாத சிக்கல்களும் இல்லை...

ஆனால்!, நாம் தான் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. சில வேளைகளில் நாம் ஒன்றும் இல்லாத சிறு செயல்கள் கூடப் பெரிய சிக்கல்களாகக் கருதுவதுண்டு...

அதைப் பற்றியே நினைத்து, நினைத்து கலங்குவதுண்டு. ஆனால்!, அவை மிகச் சிறிய செயலாக இருக்கும். முதலில் நாம் சிக்கலுக்குள்ளேயே இருக்காமல், அதைவிட்டு வெளிவர வேண்டும்...

அதைத் தீர்க்கும் வழிபற்றி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதேபோல் உரிய சிக்கலுக்கு, உரிய காலத்தில் முடிவெடுப்பது முக்கியமானதாகும். காலம் தாழ்த்தி எடுக்கும் முடிவுகள் பயனளிப்பதில்லை...

அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு. அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன் உணவை விரும்பிச் சாப்பிட, படகை எடுத்துக் கொண்டு சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள்...

அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி விடும். அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள் தான் மிகச் சுவையானதாக இருக்கும். ஆனால்!, மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்து விடும்...

மீனவர்கள் கையோடு, பனிக்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும்!, மக்களுக்கு மனநிறைவு இல்லை...

அப்போது பிடிக்கப்பட்ட மீனுக்கும் பனிக்கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர், இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டுக் கொண்டு வந்தனர்…

ஆயினும், அத்தனைப் பெரிய கடற்பரப்பில் நீந்திக் கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை…

இந்த சிக்கலுக்கு என்ன தீர்வு என்று ஆலோசித்தார்கள் மீனவர்கள், புதிதாக ஒரு வழி கண்டு பிடித்தார்கள்...

குட்டிச் சுறா மீன் ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.இந்தச் சுறாவிடம் இருந்து தப்பிப்பதற்காக. அந்த மீன்கள் எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக ஓய்வின்றி நீந்திக் கொண்டே இருந்தன...

இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள் முன்பு இருப்பதையும் விட மிகச் சுவையானதாக இருந்தது...

ஆம் நண்பர்களே...!

🟡 நாம் வாழ்கின்ற வாழ்க்கையும் அப்படித் தான். வாழ்க்கையை சுவைக்க கவலைகளோடே இருக்கக் கூடாது...!

🔴 சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். சிக்கல்கள் என்கிற சுறா இருந்தால் மட்டும் தான் வாழ்க்கை என்ற மீன்கள் சுவையானதாக இருக்கும்...!!

⚫ சிக்கல்கள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம், சோம்பியே தான் கிடப்போம், சுறுசுறுப்பாக ஓடி வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம்...!!!

உடுமலை சு தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.