வரலாற்றில் இன்று – 12.08.2023

ஆகஸ்டு 12 (August 12) கிரிகோரியன் ஆண்டின் 224 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 225 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 141 நாட்கள் உள்ளன.

📌இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 30 – மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள்.

1281 – மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கானின் கடற்படைகள் ஜப்பானை அணுகும் போது சூறாவளியில் சிக்குண்டு இறந்தனர்.

1480 – ஒட்டோமான் படையினர் இஸ்லாம் மதத்திற்கு மாற ஒப்புக்கொள்ளாத 800 கிறிஸ்தவர்களை தலையை சீவிக் கொன்றனர்.

1499 – வெனிசியர்களுக்கும் ஒட்டோமான் துருக்கியர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது.

1833 – சிக்காகோ அமைக்கப்பட்டது.

1851 – ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1853 – நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.

1877 – அசாப் ஹோல் என்பவர் செவ்வாய்க் கோளின் டெய்மோஸ் என்ற சந்திரனைக் கண்டுபிடித்தார்.

1883 – கடைசி குவாகா (வரிக்குதிரை வகை) ஆம்ஸ்டர்டாமில் இறந்தது.

1914 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியா ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. பிரித்தானிய இராச்சியதின் அனைத்து குடியேற்ற நாடுகளும் இதனுள் அடங்கின.

1952 – மொஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.

1953 – சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது.

1960 – எக்கோ I என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.

1964 – இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.

1978 – ஜப்பானும் மக்கள் சீனக் குடியரசும் தமக்கிடையே நட்புறவு, அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

1981 – ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.

1985 – ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதிக் கொண்டதில் 520 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காப்பாற்றப்பட்டனர்.

1985 – ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

1990 – வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990 – அமெரிக்கா, தென் டகோட்டாவில் டிரன்னொசோரஸ் என்னும் டைனசோரின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

2000 – கே-141 கூர்ஸ்க் என்ற ரஷ்யக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்கியது.

2005 – ஸ்ரீ லங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.

2005 – மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.

2005 – இலங்கையின் தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.

2006 – இலங்கையின் புத்திஜீவிகளில் ஒருவரான கேதீஸ் லோகநாதன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

📌 இன்றைய தின பிறப்புக்கள்

1887 – எர்வின் சுரோடிங்கர், ஆஸ்திரிய இயற்பியலாளர் (இ. 1961)

1912 – சோ. சிவபாதசுந்தரம், வானொலி ஒலிபரப்பாளர், பிபிசி தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை எனப் பெயரிட்டவர் (இ. 2000)

1924 – ஸியா உல் ஹக், பாகிஸ்தான் அதிபர் (இ.1988)

1928 – தமிழண்ணல், தமிழறிஞர் (இ. 2015)

1971 – பீட் சாம்ப்ரஸ், அமெரிக்க டென்னிஸ் வீரர்

📌 இன்றைய தின இறப்புகள்

கிமு 30 – ஏழாம் கிளியோபாட்ரா, எகிப்திய அரசி (பி. கிமு 69)

1638 – ஜோகனஸ் அல்தூசியஸ், செருமானிய மெய்யியலாளர் (பி. 1557)

1827 – வில்லியம் பிளேக், ஆங்கிலேயக் கவிஞர், ஓவியர் (பி. 1757)

1848 – ஜார்ஜ் ஸ்டீபென்சன், ஆங்கிலேயப் பொறியாளர் (பி. 1781)

1955 – தாமசு மாண், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1875)

1964 – இயான் பிளெமிங், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1908)

1989 – வில்லியம் ஷாக்லி, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1910)

2005 – ரேலங்கி செல்வராஜா, இலங்கை நடிகை, ஊடகவியலாளர் (பி. 1960)

📌 இன்றைய தின சிறப்பு நாள்

அனைத்துலக இளையோர் நாள்

உலக யானைகள் தினம்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.