வரலாற்றில் இன்று – 24.08.2023

ஆகஸ்டு 24 (August 24) கிரிகோரியன் ஆண்டின் 236 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 237 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 129 நாட்கள் உள்ளன.

📌இன்றைய தின நிகழ்வுகள்

1349 – ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1511 – மலாக்காவை போர்த்துக்கல் மன்னன் அல்பொன்சோ டி அல்புகேர்க் கைப்பற்றினான்.

1572 – புனித பார்த்தெலோமேயு தினப் படுகொலை: பிரான்சின் 9ம் சார்ல்சின் கட்டளைக்கேற்ப பிரெஞ்சுப் புரொட்டெஸ்தாந்தர்கள் படுகொலைப் படலம் ஆரம்பமாயிற்று.

1690 – கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.

1814 – பிரித்தானியப் படையினர் வாஷிங்டன், டி.சி.யை முற்றுகையிட்டு வெள்ளை மாளிகை உட்படப் பல கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர்.

1821 – மெக்சிகோவின் ஸ்பெயினுடனான விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1875 – கப்டன் மத்தியூ வெப் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதலாவது மனிதர் ஆனார்.

1912 – அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1929 – பாலஸ்தீனத்தில் நிகழ்ந்த கலவரங்களில் நூறுக்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1931 – பிரான்சும் சோவியத் ஒன்றியமும் தமக்கிடையே போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.

1936 – ஆஸ்திரேலிய அண்டார்க்ட்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

1939 – நாசி-சோவியத் உடன்பாடு ஹிட்லருக்கும் ஜோசப் ஸ்டாலினுக்கும் இடையில் எட்டப்பட்டது.

1949 – நேட்டோ ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.

1954 – அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.

1954 – பிரேசில் அதிபர் கெட்டூலியோ வார்காஸ் தற்கொலை செய்து கொண்டார்.

1968 – பிரான்ஸ் தனது முதலாவது ஐதரசன் குண்டை வெடிக்க வைத்தது.

1989 – வொயேஜர் 2 நெப்டியூனைத் தாண்டியது.

1991 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பசோவ் விலகினார்.

1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரேன் பிரிந்தது.

1992 – மக்கள் சீனக் குடியரசுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.

1995 – விண்டோஸ் 95 வெளியிடப்பட்டது.

2004 – மாஸ்கோவில் இரண்டு விமானங்கள் தற்கொலைக் குண்டுதாரியினால் தகர்க்கப்பட்டதில் 89 பயணிகள் கொல்லப்பட்டனர்.

2006 – புளூட்டோ ஒரு கிரகம் அல்லவென அறிவிக்கப்பட்டது.

2006 – ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பான UNOPS அலுவலர் ஒருவர் அம்பாறை திருக்கோவில் பகுதியில் அலுவலகத்திற்கு அருகில் வைத்துச் சுட்டுக்கொல்லப் பட்டார். சங்கதி

2008 – சீனாவில் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தன.

📌 இன்றைய தின பிறப்புக்கள்

1817 – டால்ஸ்டாய், ரஷ்ய எழுத்தாளர் (இ. 1875)

1906 – நாரண துரைக்கண்ணன், எழுத்தாளர், பத்திரிகையாளர்

1929 – யாசர் அரபாத், பாலஸ்தீனத் தலைவர் (இ. 2004)

1941 – இ. பத்மநாப ஐயர், ஈழத்து இலக்கிய ஆர்வலர்

1947 – பௌலோ கோலோ, பிரேசில் நாட்டு எழுத்தாளர்

1963 – தா. பாலகணேசன், ஈழத்து எழுத்தாளர்

1965 – ரெஜி மிலர், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

1979 – மைக்கல் ரெட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

📌 இன்றைய தின இறப்புகள்

1832 – சாடி கார்னோ, பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1796)

1972 – வே. இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் (பி. 1888)

2014 – ரிச்சர்ட் ஆட்டன்பரோ, திரைப்பட இயக்குனர், நடிகர் (பி. 1923)

📌இன்றைய தின சிறப்பு நாள்

புனித பார்த்தெலோமேயு நாள்

உக்ரேன் – விடுதலை நாள் (1991)

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.