வரலாற்றில் இன்று – 29.08.2023

ஆகஸ்டு 29 (August 29) கிரிகோரியன் ஆண்டின் 241 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 242 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 124 நாட்கள் உள்ளன.

📌இன்றைய தின நிகழ்வுகள்

708 – செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் வார்க்கப்பட்டது.

1498 – வாஸ்கொடகாமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.

1521 – ஓட்டோமான் இராணுவம் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றியது.

1541 – ஒட்டோமான் துருக்கியர் ஹங்கேரியின் தலைநகரைக் கைப்பற்றினர்.

1655 – வார்சா சுவீடனின் பத்தாம் சார்ல்ஸ் குஸ்டாவின் சிறு படைகளிடம் சரணடைந்தது.

1658 – புரொட்டஸ்தாந்து சீரமைப்பு யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக வண. டாக்டர் பால்டியஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

1756 – ரஷ்யாவின் இரண்டாம் பிரடெரிக் ஜெர்மனியின் சாக்சனியை முற்றுகையிட்டான்.

1782 – திருகோணமலை கோட்டையை பிரெஞ்சுக் காரர் பிரித்தானியரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.

1825 – பிரேசிலைத் தனிநாடாக போர்த்துக்கல் அறிவித்தது.

1831 – மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.

1842 – நாஞ்சிங் உடன்படிக்கையின் படி முதலாம் அபின் போர் முடிவுக்கு வந்தது. ஹொங்கொங் ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.

1882 – தேர்வுத் துடுப்பாட்டத்தில் லண்டனில் ஆஸ்திரேலியா இந்திலாந்தை 7 ஓட்டங்களால் தோற்கடித்தது. பின்னர் பிரபலமான ஆஷஸ் தொடர் ஆரம்பமாக இது வழிவகுத்தது.

1885 – கோட்லீப் டாயிம்லர் மோட்டார்சைக்கிளுக்கான காப்புரிமம் பெற்றார்.

1898 – குட்இயர் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.

1907 – கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1910 – ஜப்பானியர் கொரியாவின் பெயரை சோசென் (Chōsen) என மாற்றினர்.

1930 – சென் கில்டா தீவுகளின் கடைசி குடிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஸ்கொட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்குக் குடியேற்றப்பட்டார்கல்.

1944 – 60,000 சிலவாக்கியர் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

1944 – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.

1949 – சோவியத் ஒன்றியம் ஜோ 1 என்ற தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை கசக்ஸ்தானில் நடத்தியது.

1966 – பீட்டில்ஸ் தமது கடைசி நிகழ்ச்சியை சான் பிரான்சிஸ்கோவில் நடத்தினர்.

1991 – சோவியத் உயர்பீடம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கியது.

1995 – முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.

1996 – நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்பிட்ஸ்பேர்ஜன் என்ற தீவில் உள்ள மலையுடன் மோதியதில் 141 பேர் கொல்லப்பட்டனர்.

1997 – அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

2005 – அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $115 பில்லியன் சேதம் ஏற்பட்டது.

📌 இன்றைய தின பிறப்புக்கள்

1632 – ஜான் லாக், ஆங்கிலேயத் தத்துவவியலாளர் (இ. 1704)

1923 – ரிச்சர்ட் ஆட்டன்பரோ, திரைப்பட இயக்குனர், நடிகர் (இ. 2014)

1936 – ஜான் மெக்கெய்ன், அமெரிக்க அரசியல்வாதி, 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்

1958 – மைக்கேல் ஜாக்சன், அமெரிக்கப் பாடகர், (இ. 2009)

1959 – அகினேனி நாகார்ஜூனா, இந்திய நடிகர்

1977 – விஷால், திரைப்பட நடிகர்

📌 இன்றைய தின இறப்புகள்

1976 – காசி நஸ்ருல் இஸ்லாம், வங்காளக் கவிஞர் (பி. 1899)

2008 – ஆர்வி, தமிழ் எழுத்தாளர் (பி. 1919)

  2009 – மாவை வரோதயன், ஈழத்து எழுத்தாளர்

📌 இன்றைய தின சிறப்பு நாள்

இந்தியா – தேசிய விளையாட்டு நாள்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.