தினமும் 5- 6 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியமா? மருத்துவர் சொல்வது என்ன?

பெரும்பாலான மக்கள் ஒருநாளைக்கு அதிகளவு தண்ணீர் குடித்தால் உடம்பில் உள்ள கழிவுகள் நீங்கும் என்று நம்புகிறார்கள். 

கழிவுகளை நீக்குவதற்கு நம் உடலில் நுரையீரல், சிறுநீரகம், தோல் போன்ற உறுப்புகளும், நோய்யெதிர்ப்பு சக்தி செல்களும் உள்ளன.

இந்த உறுப்புகள் அனைத்தும் ஒவ்வொரு வகையான கழிவுகளை வெளியேற்றுகிறது.

இதுதொடர்பாக மருத்துவர் அருண்குமார் அளித்துள்ள விளக்கத்தில், தண்ணீர் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.

நம் உடல் 60% தண்ணீரிலே ஆனது. தண்ணீர் ஒரு நாளைக்கு பொதுவாக 2 அல்லது 3 லிட்டர் போதுமானது.

5லிட்டர் குடிப்பேன் 6லிட்டர் குடிப்பேன் என்று குறிக்கோள் எடுத்துலாம் குடிக்க தேவையில்லை, நமக்கு போதும் என்கின்ற அளவிற்கு குடித்தால் போதுமானது.

நச்சு கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று 5 லிட்டர் 6 லிட்டர் என தண்ணீர் குடித்தால் எந்த வித பலன்களும் இல்லை.

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் கொஞ்சம் அதிகமாக தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

8 லிட்டர் 10 லிட்டர் என அதிகளவு தண்ணீர் குடித்தால் அது இரத்தத்தில் உள்ள சோடியம் உப்பின் அளவைக்குறைத்து நம் சுயநினைவை இழக்கச் செய்யும்.

எனவே நமக்கு போதும் என்கின்ற அளவுக்கு தண்ணீர் குடித்தால் போதுமானது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.