புன்னகை தந்த விடுதலை

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட காலம்..

யூதரான ஹெலன் கெல்லரும் அவரது குடும்பத்தாரும் தூக்கிலிட வேண்டிய நேரம்.

அதற்கு உத்தரவு தர வேண்டிய அதிகாரி வந்து கையெழுத்து போட்டால் அடுத்த நிமிடம் தூக்குத் தண்டனை என்ற நிலை.

அந்த அதிகாரி வந்து சேர்ந்ததும் அவர் ஹெலன் கெல்லரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தார்.

அந்த அதிகாரி ஹெலன் கெல்லரை, குடும்பத்தோடு வேறு நாட்டுக்குத் தப்பியோடச் செய்தார்.

காரணம் இதுதான்..அந்த அதிகாரி தினமும் சிறைக் கைதிகளை பார்ப்பதற்கு சிறைச்சாலை வருவார்.

அந்த நேரத்தில் எல்லாம் கெல்லர் அமைதியாக அந்த ஜெயில் அதிகாரியைப் பார்த்து புன்னகை செய்வாராம்.

ஆனால் அந்த அதிகாரி ஒருநாளும் திருப்பி புன்னகை செய்ய மாட்டாராம்..அன்று ஏனோ அந்த அதிகாரியின் மனதில் மாற்றம் ஏற்பட அந்தப் புன்னகை தான் காரணமானது..

''எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்..? என்பதைப் புரிந்துக் கொண்ட கெல்லர், சாவதற்குத் தயாராகி விட்ட நிலையில் ,

வாழ்கின்ற காலத்தை ஏன் சோகமாக்கிட வேண்டும் என்ற தெளிவு ஹெலனிடம் இருந்தது.

இந்த நேர்மறையான எண்ணத்தின் வெளிப்பாடு தான் அவரது புன்னகை.

அந்தப் புன்னகையின் விலை தான் அவரது விடுதலை..

ஆம்.,நண்பர்களே..,

உங்களின் புன்னகை, மற்றவர்கள் மீது நீங்கள் வைத்து இருக்கும் உறவை மேலும், வலுப்படுத்தச் செய்யும்   மிகச் சிறந்த ஆயுதம்..

தேவையான இடங்களில், உங்கள் புன்னகையைத் தவழ விட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.