வரலாற்றில் இன்று – 03.10.2023

அக்டோபர் 3 (October 3) கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.

📌 இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 2333 – கொஜொசியோன் நாடு (தற்போதைய கொரியா) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது.

1739 – ரஷ்ய-துருக்கி போர், 1736–1739 முடிவில் ரஷ்யாவுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

1778 – பிரித்தானியாவின் கப்டன் ஜேம்ஸ் குக் அலாஸ்காவில் தரையிறங்கினார்.

1908 – பிராவ்தா செய்திப்பத்திரிகை லியோன் ட்ரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளியிடப்பட்டது.

1918 – மூன்றாம் போரிஸ் பல்கேரியாவின் மன்னனாக முடிசூடினான்.

1929 – சேர்பியா, குரொவேசியா, சிலவேனியா இணைக்கப்பட்டு அதற்கு யூகொஸ்லாவிய இராச்சியம் எனப் பெயரிடப்பட்டது.

1932 – ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1935 – இத்தாலி எதியோப்பியாவைக் கைப்பற்றியது.

1942 – விண்வெளிப் பறப்பு: செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. முதன் முதலில் விண்வெளியை அடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் இதுவாகும்.

1952 – ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.

1962 – சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி ஷீரா 6 தடவை பூமியைச் சுற்றினார்.

1981 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் “மேஸ்” சிறைச்சாலையில் ஐரிஷ் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.

1985 – அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.

1990 – ஜேர்மனியின் கிழக்கும் மேற்கும் ஒன்றாக இணைந்தன. ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு மேற்கு ஜேர்மனியுடன் இணைந்தது.

1993 – சோமாலியாவின் போர்பிரபு முகம்மது ஃபரா ஐடிட் என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.

2001 – வங்காள தேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் கலீதா சியாவின் பங்களாதேஷ் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.

2013 – இத்தாலியில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரையில் உயிரிழந்தனர்.

📌 இன்றைய தின பிறப்புக்கள்

1862 – ஜானி பிரிக்ஸ், ஆங்கிலத் துடுப்பாட்ட வீரர் (இ. 1902)

1917 – பீட்டர் கெனமன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1997)

1940 – முரு. சொ. நாச்சியப்பன், மலேசிய எழுத்தாளர்

1954 – சத்யராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர்

1957 – இராபர்ட்டோ செவெதோ, உலக வணிக அமைப்பு தலைவர்

📌 இன்றைய தின இறப்புகள்

1226 – அசிசியின் பிரான்சிசு, இத்தாலியப் புனிதர் (பி. 1181)

1867 – எலியாஸ் ஓவே, தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் (பி. 1819)

1995 – ம. பொ. சிவஞானம், தமிழறிஞர், அரசியல்வாதி (பி. 1906)

1999 – அக்கியோ மொறிட்டா, சோனி நிறுவனத்தைத் தோற்றுவித்தவர் (பி. 1921)

2009 – எஸ். இராமச்சந்திரன், இலங்கையின் மலையகத்தை சேர்ந்த ஓவியர் (பி. 1942)

2011 – ஆ. கந்தையா, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1928)

📌 இன்றைய தின சிறப்பு நாள்

ஜேர்மனி – இணைப்பு நாள் (1990)

ஈராக் – விடுதலை நாள் (1932)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.