வரலாற்றில் இன்று – 17.10.2023

அக்டோபர் 17 (October 17) கிரிகோரியன் ஆண்டின் 290 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 291 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 75 நாட்கள் உள்ளன.

✅ இன்றைய தின நிகழ்வுகள்

1091 – லண்டனில் பெரும் சூறாவளி இடம்பெற்றது.

1346 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வேர்ட் ஸ்கொட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் லண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான்.

1448 – கொசோவோவில் ஹங்கேரிய இராணுவம் ஒட்டோமான் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.

1604 – ஜெர்மனிய வானிலையாளர் ஜொகான்னஸ் கெப்லர் வானில் திடீரென மிக ஒளிர்வுள்ள விண்மீன் (எஸ்.என். 1604) தோன்றுவதைக் கண்டார்.

1610 – பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.

1660 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.

1662 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ் டன்கேர்க் நகரை 40,000 பவுணிற்கு பிரான்சுக்கு விற்றான்.

1800 – டச்சு குடியேற்ற நாடான குரக்காவோ இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்தது.

1805 – நெப்போலியனின் போர்கள்: ஊல்ம் நகரில் இடம்பெற்ற சமரில் ஆஸ்திரியப் படையினர் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகளிடம் வீழ்ந்தன.

1806 – எயிட்டியின் மன்னன் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டான்.

1907 – மார்க்கோனி அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.

1912 – முதலாம் பால்க்கன் போர்: பல்கேரியா, கிரேக்கம், சேர்பியா ஆகியன ஒட்டோமான் பேரரசுடன் போரை அறிவித்தன.

1917 – முதலாம் உலகப் போரில் ஜெர்மனி பிரித்தானியா மீதான தனது முதலாவது குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியது.

1933 – அல்பேர்ட் ஐன்ஸ்டைன் நாசி ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.

1941 – இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக ஜெர்மனிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.

1961 – பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1965 – 1964 நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.

1966 – நியூயோர்க்கில் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.

1979 – அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1995 – யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.

1998 – நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில் 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்ட்னர்.

2003 – தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான வானளாவி ஆனது.

2006 – ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 300 மில்லியனை எட்டியது.

2006 – ஈழப்போர்: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.

✅பிறப்புக்கள்

1906 – கே. பி. ஹரன், தமிழ்ப் பத்திரிகையாளர், (இ. 1981)

1912 – பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் I, (இ. 1978)

1965 – அரவிந்த டி சில்வா, இலங்கை அணியின் துடுப்பாளர்

1970 – அனில் கும்ப்ளே, இந்திய அணியின் சுழற் பந்தாளர்

1972 – எமினெம், அமெரிக்காவின் ராப் இசைக்கலைஞர்

✅இன்றைய தின இறப்புகள்

1981 – கவிஞர் கண்ணதாசன், (பி. 1927)

✅இன்றைய தின சிறப்பு நாள்

உலக வறுமை ஒழிப்பு நாள்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.