மாணவர்களின் கல்விச் செயற்பாட்டில் பெற்றோர்களின் வகிபங்கு

நாளைய உலகை ஆளும் வள்ளமை கொண்ட மாணவ சமுதாயத்தை உருவாக்குவது அனைவரது கடமையாகும். குடும்பத்தில் இருந்து கிடைக்கும் முக்கிய செல்வம் மொழியாகும்.இதனைக்கொண்டு குழந்தைகளுடன் அடிக்கடிக்க வைத்தல், கதைப்பதற்கு குழந்தையை தூண்டல், பிழையின்றி வசனங்களை உச்சரிக்க உதவுதல், குழந்தைகளின் அனுபவங்களுக்கு அமைவாக பேசப்பழக்குதல் போன்றன பெரும்பாலும் பெற்றோர்களினால்செய்யப்படுகின்றன. அந்த வகையில் பாடசாலையின் கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகள் அதாவது ஆசிரியர், மாணவர் தொடர்பு சிறப்பான முறையில் இடம்பெற்றாலும் பிள்ளைகள் மீது பெற்றோர் காட்டும் அக்கறையே மாணவர்களின் கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. 

 அந்த வகையில் பெற்றோரால் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் தேவைகளை எடுத்து நோக்குவோமானால் மாஸ்லோ எனும் உளவியலாளர் தேவைகளை உடலியல் தேவை, காப்புத் தேவை, அன்புத் தேவை, கணிப்புத் தேவை, சுயதிறனியல் நிறைவுத் தேவை என்ற வகிபங்கில் கூறுகின்றார். இவ்வாறான தேவைகள் அனைத்தும் ஒரு மாணவனுக்கு பெற்றோரால் சிறப்பாக வழங்கப்படுமானால் அந்த மாணவன் கல்வியில் சிறந்த முறையில் செயற்படுவான். அந்த வகையில் இந்த தேவைகள் போதியளவு நிறைவு செய்யப்படாத மாணவர்கள் தாழ்வுணர்ச்சி, தன்னிழிவு என்பவற்றுக்காளாகி கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்படுவார்கள்.ஆகவே பிள்ளைகளுக்கு போதியளவு தேவைகளை நிறைவு செய்து கல்வியில் ஊக்கத்துடன் செயற்பட ஊக்குவிப்பது பெற்றோர்களின் பணியாகும்.

இன்றைய உலக நவீன மாற்றத்திற்கேற்ப கல்விக்கலைத்திட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டுள்ளது.அந்த வகையில் ஆரம்பத்தில் 1972ம் ஆண்டு யாப்பு சீர்திருத்தத்துக்கு அமைய 10 ஆண்டுக்கு ஒரு மாற்றத்திற்கு உள்ளாகி வரும் கலைத்திட்டம் இன்றைய நவீன காலகட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு அடிக்கடி மாறிக்கொண்டுள்ளமையால் மாணவர்களின் கல்வி நிலைமைகளில் அதிக போட்டி நிலவிக் கொண்டுள்ளது.

அந்த வகையில் ஒரு மாணவன் பாடம் சார்ந்த விடயங்களை மட்டும் கற்பதோடு நின்றுவிடாமல் தொழிநுட்பத்திறனையும், இணைப்பாடவிதான செயற்பாடுகளையும்வளர்க்க வேண்டிய தேவை உள்ளது. எனவே மாணவ சமூகம் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடசாலையில் அதிபர் ஆசிரியர்கள் உழைப்பதோடு பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை சிறப்பாக வழிநடத்த வேண்டும்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் போது பல விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அத்தோடு தமது பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய விடயங்கள் சட்ட பூர்வமானவை என்றும் பாடசாலையும் ஆசிரியர்களும் பதில் கூற வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். 

அந்த வகையில் பல நெருக்கடிகளைப் பெற்றோர்களிடமிருந்து ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்றனர். ஒரு மாணவன் கல்வி கற்க மறுக்கும் சந்தர்ப்பங்களில் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன. 

எவ்வாறான முரண்பாடுகள் ஏற்பட்டாலும் தமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளில் ஆசிரியர்கள் போதியளவு கவனம், அக்கறை செலுத்துகின்றனர் என்பதை அறிந்து செயற்படும் பொறுப்பு பெற்றோர்களது முக்கிய கடமையாகும்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கற்கும் பாடசாலையில் செயற்படும் முறைகளால் தமது பிள்ளைகளின் கல்வியில் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது பிள்ளைகள் கல்வியில் கொண்டிருக்கும் ஆர்வம், ஊக்கம் என்பவற்றை அறிதல், கலைத்திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள், பாடசாலை சட்ட திட்டங்களை அறிந்து கடைப்பிடித்தல், வகுப்பறை செயற்பாடுகளை அறிந்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடுதல், மாணவர்களுக்கு கொடுக்கப்படும் வீட்டு வேலைகளுக்கு உதவுதல், ஏனைய மாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடி செயற்பாடுகளை அறிதல், பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு உதவுதல் போன்ற பல செயற்பாடுகளில் பெற்றோர்கள் கலந்து கொள்வதன் மூலம் மாணவர்களின் உள்ளத்தில் விருத்தி, சிந்தனையாற்றல் என்பன ஏற்பட்டு ஆளுமை விருத்தியடைகின்றது. இதன் மூலம் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு மாணவர்கள் விருப்புடன் செயற்பட முன்வருகின்றனர். 

ஆயினும் சில பெற்றோர்கள் பாடசாலையுடன் தமது தொடர்பை ஏற்படுத்த முடியாத சூழ்நிலை காணப்படலாம் அவ்வாறான பெற்றோர்களை ஆசிரியர்கள் சந்தித்து தகுந்த விழிப்புணர்வை கொடுத்து மாணவர்களின் கல்வியில் பெற்றோர்களை செயற்பட வைப்பது ஆசிரியரின் கடமையாகும்.அதேசமயம் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விடயம் மாணவர்களின் வரவு, இடைவிலகும் மாணவனுக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். எனவே தங்களது பிள்ளைகளை ஆர்வத்துடனும், விருப்புடனும் பாடசாலைக்கு அனுப்பும் பொறுப்பு பெற்றோர்களின் கையிலே உள்ளது.

பெற்றோர்கள் பிரிந்து வாழ்தல், மறுமணம் செய்தல், தவறான நடத்தைகளில் ஈடுபடல், தாய் தந்தையர் வெளிநாடு செல்லல் என்பவை பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அதாவது இந்த விடயங்களால் குடும்ப தொகுதியில் மாற்றங்கள் ஏற்படும் போது பிள்ளைகளுக்கான வாழ்க்கை பயிற்சிகள் கிடைக்காமல் போகும்.

 பெற்றோர்கள் தமது வகிபங்கினை எவ்வளவு தூரம் சிறப்பாகச் செய்கின்றார்களோ அதனடிப்படையில் மாணவர்களின் மனப்பாங்குகள், எண்ணக்கருக்கள், ஆற்றல்கள் விருத்தியடைந்து கல்விச் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படும் என்பதை அறிந்து செயற்பட வேண்டும்.

 மாணவர்களுக்கு சமயம், ஒழுக்கம். சமூக நடத்தை என்பவற்றையும் கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது எனவே விரைந்து செயற்பட்டு எதிர்கால சந்ததியை உருவாக்க வழிசெய்வோம்.

தில்லைநாயகம் விஜிதன்.

இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு.கல்வியியல் சிறப்பு கற்கை மாணவன்.

கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை.

கிழக்கு பல்கலைக்கழகம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.