வாழ்க்கை நேரத்தால் ஆனது.

வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில், வாழ்க்கை நேரத்தால் ஆனது.

 நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். 

இதோ! நேரத்தின் மதிப்பு என்ன என்று தெரிய ஒன்பது வழிகள்..

ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் 

வென்றவரை கேளுங்கள்.

ஒரு வினாடியின் மதிப்பு என்ன வென்று

விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.

ஒரு நிமிடத்தின் மதிப்பு என்ன வென்று தூக்கில் இடப்படும் கைதியிடம் கேளுங்கள்.

ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.

ஒரு நாளின் மதிப்பு என்னவென்று  அன்று வேலை கிடைக்காமல் போன தினக் கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.

ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார

பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.

ஒரு மாதத்தின் மதிப்பு என்ன வென்று குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.

ஒரு வருடத்தின் மதிப்பு என்ன வென்று

தேர்வில் தோல்வி அயடைந்த மாணவனைக் கேளுங்கள்.

ஒரு வாழ்வின் மதிப்பு என்ன வென்று

உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.

ஆம்.,நண்பர்களே..!

நீங்கள் வாழ்க்கையை நேசிக்கிறீர்கள் என்றால், நேரத்தை வீணாக்காதீர்கள்.

நேரம் என்பது வாழ்க்கையால் ஆனது..உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே போதும்.

உடுமலை சு தண்டபாணி

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.