கொரோனா அபாயம் – மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார் அஜித் ரோஹண.

கொரோனா அபாயம் – மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார் அஜித் ரோஹண.

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளமையால் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகள் மீறி பெரும்பாலானோர் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே அஜித் ரோஹண இவ்வாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“கடந்த தினங்களில் பொதுப்போக்குவரத்தில் உரிய முறைமையில் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் பின்பற்றப்படவில்லை.

மேலும் பொது இடங்களிலும், வரிசைகளிலும் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை பொதுமக்கள் பின்பற்றாத நிலைமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

பொதுமக்கள் தொடர்ந்தும் இவ்வாறாக செயற்படுவார்களாயின் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.