பாடசாலைகள் நாளை ஆரம்பம் – மேல் மாகாணத்தில் தரம் 5,11,13 நாளை முதல்

பாடசாலைகள் நாளை ஆரம்பம் – மேல் மாகாணத்தில் தரம் 5,11,13 நாளை முதல்.

மேல் மாகாணத்திலுள்ள தரம் 5, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேல் மாகாணம் தவிர்ந்த நாடு பூராகவும் உள்ள அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் கடந்த 25ம் திகதியுடன் நிறைவு பெற்றிருந்தன.

இதன்படி, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இதற்கு அமையவே, மேல் மாகாணத்தின் தரம் 5, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் சுத்திகரிப்பு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.