சிறைச்சாலைக்குள் கண்டெடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி, ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு சொந்தமானதா? – வெளியானது தகவல்.

 சிறைச்சாலைக்குள் கண்டெடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி, ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு சொந்தமானதா? – வெளியானது தகவல்.


அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி, சிறை வைக்கப்பட்டுள்ள ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு சொந்தமானது என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவினால், ஈசிகேஸ் முறையின் கீழ், 5 லட்சம் ரூபா பணத்தை செலுத்தி, இந்த தொலைபேசியை சிறைச்சாலைக்குள் கொண்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சிறைச்சாலை உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கான பொறுப்பு, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குற்றம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், சிறைச்சாலை கட்டளை சட்டத்தின் கீழ் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என கூறப்படுகின்றது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.