நாட்டுக்குள் வரும் இஸ்லாமிய புத்தகங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள முடிவு.

 நாட்டுக்குள் வரும் இஸ்லாமிய புத்தகங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள முடிவு.


வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குள் இஸ்லாமிய சமயம்‌ சார்ந்த புத்தகங்களை தருவிக்கும்போது அல்லது கொள்வனவு செய்யும்போது, அப்புத்தகங்கள்‌ தொடர்பில்‌ பாதுகாப்பு அமைச்சின்‌ அனுமதியை கண்டிப்பாக பெற்றுக்‌கொள்ள வேண்டும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்‌ பாதுகாப்பு அமைச்சு MOD/CNI/SY/LOCAL/367 (VOL 01 97) எனும்‌ கடிதம்‌ ஊடாக இலங்கை சுங்கத்‌ இணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை சுங்கத்‌ திணைக்களம், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும்‌ மத்தளை விமான நிலையம்‌ உள்ளிட்ட தனது அனைத்துப்‌ பிரிவுகளுக்கும்‌ இது தொடர்பில்‌ கவனம்‌ செலுத்தக்‌கோரி அறிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து இஸ்லாமிய சமயம்‌ தொடர்பில்‌ எந்த வகையிலேனும்‌ புத்தகம்‌ ஒன்று நாட்டுக்குள்‌ வருமாயின்‌ அது தொடர்பில்‌ பாதுகாப்பு அமைச்சின்‌ அனுமதி பெறப்பட்ட பின்னரேயே அது அனுமதிக்கப்படும்‌ என சுங்கத்‌ திணைக்களத்தின் உயர்‌ அதிகாரி ஒருவர்‌ தெரிவித்தார்‌.

இதுவரை நாட்டுக்குள்‌ இஸ்லாமிய புத்தகங்கள்‌ கொண்டுவரப்படும்‌ போது, முஸ்லிம்‌ சமய கலாசார திணைக்களம் அது தொடர்பில்‌ மேற்பார்வை நடவடிக்கைகளை முன்னெடுத்து சான்றிதழ்களை வழங்கி வந்ததுடன்‌, அவர்களின்‌ அனுமதியுடனேயே புத்தகங்கள்‌ தருவிக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும்‌ கத்தாரிலிருந்து அண்மையில்‌, பேருவளை நபவியா எனும்‌ இஸ்லாமிய இளைஞர் அமைப்புக்கு அனுப்பப்பட்டிருந்த 9௦ புத்தகங்களில்‌ 04 புத்தகங்கள்‌ சலபி மற்றும்‌ வஹாப் வாத சிந்தனைகளை கொண்டிருப்பதாக கூறப்படும்‌ நிலையிலேயே, பாதுகாப்பு அமைச்சு தனது அனுமது இன்றி, இஸ்லாமிய சமய புத்தகங்கள்‌ வெளிநாடுகளில்‌ இருந்து நாட்டுக்குள்‌ கொண்டுவரப்படுவதை தடை செய்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின்‌ அனுமதியைக்‌ கட்டாயமாக்கும்‌ நடைமுறையானது கடந்த 05 ஆம்‌ திகதி முதல்‌ அமுல்‌ செய்யப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின்‌ தகவல்களும்‌ சுங்கத்‌ திணைக்களத்தின் தகவல்கலும்‌ உறுதி செய்தன.

இது தொடர்பிலான பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு, புத்தசாசன மற்றும்‌ மத விவகார அமைச்சுக்கும்‌ அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.