வரலாற்றில் இன்று

 வரலாற்றில் இன்று


மார்ச் 10 கிரிகோரியன் ஆண்டின் 69 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 70 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 296 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்.

👉298 – உரோமைப் பேரரசர் மாக்சிமியன் வட ஆப்பிரிக்காவில் பேர்பர்களுக்கு எதிரான போரை முடித்துக் கொண்டு, கார்த்திஜ் நகரைச் சென்றடைந்தார்.

👉1629 – முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.

👉1735 – உருசியாவிற்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உருசியப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறின.

👉1801 – பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

👉1804 – லூசியானா வாங்கல்: லூசியானாவை அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி மிசூரி, செயிண்ட் லூயிசில் நடைபெற்றது.

👉1814 – பிரான்சில் லாவோன் என்ற இடத்தில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.

👉1830 – அரச நெதர்லாந்து கிழக்கிந்திய இராணுவம் அமைக்கப்பட்டது.

👉1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது.

👉1865 – ஏமி ஸ்பெயின் என்ற அமெரிக்க அடிமைப் பெண், தனது முதலாளியிடம் இருந்து திருடிய குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டாள்.

👉1876 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் வெற்றிகரமான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.

👉1893 – ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது.

👉1902 – துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது.

👉1906 – வடக்கு பிரான்சில் குரியேரெஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

👉1909 – மலேசியத் தீபகற்பத்தின் கடாரம், கிளாந்தான், பெர்லிஸ், திராங்கானு உள்ளடங்கிய இறைமையை ஆங்கிலோ-சியாம் உடன்படிக்கையின் படி தாய்லாந்து பிரித்தானியாவுக்கு விட்டுக் கொடுத்தது.

👉1911 – இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.[1]

👉1922 – கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் குடல்வாலழற்சி காரணமாக விடுதலையானார்.

👉1933 – கலிபோர்னியாவின் லோங் கடற்கரையில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கம் காரணமாக 120 பேர் உயிரிழந்தனர்.

👉1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க வான்படையினர் டோக்கியோ மீது குண்டுகள் வீசியதில் 100,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

👉1948 – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

👉1952 – கியூபாவில் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா தலைமையில் இராணுவப் புரட்சி வெற்றி பெற்றது.

👉1959 – திபெத்திய எழுச்சி: சீனாவினால் கடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான திபெத்தியர் தலாய் லாமாவின் மாளிகையைச் சூழ்ந்து கொண்டு அவருக்குப் பாதுகாப்பளித்தனர்.

👉1970 – வியட்நாம் போர்: அமெரிக்கத் தளபதி ஏர்னெஸ்ட் மெடினா வியட்நாமில் 1968 இல் நிகழ்த்திய மை லாய் படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டான்.

👉1977 – யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

👉1982 – கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.

👉1990 – எயிட்டியில் இடம்பெறற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

👉2003 – விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் இலங்கைக் கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 11 போராளிகள் கொல்லப்பட்டனர்.

👉2006 – செவ்வாய் உளவு சுற்றுக்கலன் செவ்வாய்க் கோளை அடைந்தது.

👉2011 – சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

👉1628 – மார்செல்லோ மால்பிகி, இத்தாலிய மருத்துவர், உயிரியலாளர் (இ. 1694)

👉1760 – தோமசு மெயிற்லண்ட், பிரித்தானிய இலங்கையின் 2-வது ஆளுநர் (இ. 1824)

👉1798 – பியர்ரே பிரெடெரிக் சாரசு, பிரான்சியக் கணிதவியலாளர் (இ. 1861)

👉1845 – உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர் (இ. 1894)

👉1867 – லில்லியன் டி வால்டு, அமெரிக்கத் தாதி, மனிதநேயவாதி (இ. 1940)

👉1884 – மா. மங்களம்மாள், ஈழத்துக் காந்தியவாதி, சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி, அரசியல்வாதி (இ. 1971)

👉1914 – கா. பொ. இரத்தினம், இலங்கைத் தமிழறிஞர், அரசியல்வாதி (இ. 2010)

👉1920 – மணியம்மையார், திராவிடர் கழகத்தின் தலைவர், சொற்பொழிவாளர், எழுத்தாளர் (இ. 1978)

👉1921 – எம். வி. ராஜம்மா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1999)

👉1932 – உடுப்பி ராமச்சந்திர ராவ், இந்திய இயற்பியலாளர், பொறியியலாளர்

👉1933 – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தேசிய உணர்வாளர் (இ. 1995)

👉1933 – பழ. நெடுமாறன், தமிழக அரசியல்வாதி, தமிழ்த் தேசிய உணர்வாளர்

👉1934 – எம். கே. நாராயணன், கேரள அரசியல்வாதி

👉1936 – செப் பிளாட்டர், சுவிட்சர்லாந்துத் தொழிலதிபர்

👉1939 – அஸ்கர் அலி என்ஜினியர், இந்திய செயற்பாட்டாளர், எழுத்தாளர் (இ. 2013)

👉1940 – சக் நோரிஸ், அமெரிக்க நடிகர், தற்காப்புக் கலை வீரர்

👉1949 – பில் பக்ஸ்டன், கனடியக் கணிணி அறிவியலாளர்

👉1952 – மோர்கன் சுவாங்கிராய், சிம்பாப்வேயின் 2வது பிரதமர்

👉1957 – உசாமா பின் லாதின், அல் காயிதா அமைப்பை ஆரம்பித்த சவுதி அரேபியர் (இ. 2011)

👉1958 – ஷாரன் ஸ்டோன், அமெரிக்க நடிகை

👉1971 – ஜான் ஹாம், அமெரிக்க நடிகர்

👉1974 – பிஸ் ஸ்டோன், டுவிட்டரை ஆரம்பித்த அமெரிக்கத் தொழிலதிபர்

👉1984 – ஒலிவியா வைல்ட், அமெரிக்க நடிகை

இன்றைய தின இறப்புகள்

👉483 – சிம்ப்ளீசியுஸ் (திருத்தந்தை)

👉1872 – ஜிசொப்பி மாசினி, இத்தாலிய ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1805)

👉1897 – சாவித்திரிபாய் புலே, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (பி. 1831)

👉1913 – ஹேரியட் டப்மேன், அமெரிக்க தாதி, செயற்பாட்டாளர் (பி. 1820)

👉1966 – பிரிட்சு ஜெர்னிகி, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1888)

👉1973 – குழிக்கரை காளிதாஸ் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1913)

👉1978 – பொபிலி அரசர், தென்னிந்திய அரசியல்வாதி, சென்னை மாகாண முதல்வர் (பி. 1901)

👉1979 – எஸ். டி. சுந்தரம், தமிழக எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், கவிஞர், திரைப்பட இயக்குநர் (பி. 1921)

👉1999 – குசுமாகரசு, மராத்திய எழுத்தாளர் (பி. 1912)

👉2001 – சி. ஜே. எலியேசர், ஈழ-ஆத்திரேலியக் கணிதவியலாளர், தமிழ் தேசிய செயற்பாட்டாளர் (பி. 1918)

👉2012 – பிராங்க் செர்வுட் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1927)

👉2016 – பீ. எம். புன்னியாமீன், இலங்கை எழுத்தாளர், வெளியீட்டாளர், ஊடகவியலாளர், விக்கிப்பீடியர் (பி. 1960)

இன்றைய தின சிறப்புகள்.

👉பெரும் இனவழிப்பு நினைவு நாள் (பல்காரியா)

👉திபெத்திய எழுச்சி நாள்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.