முல்லைத்தீவில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழப்பு.

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழப்பு.

𝑰𝑻𝑴▪️முல்லைத்தீவு − தண்ணிமுறிப்பு வயல் பகுதியில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

𝑰𝑻𝑴▪️இந்த சம்பவம் நேற்று (15) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

𝑰𝑻𝑴▪️ குமுழமுனை மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

𝑰𝑻𝑴▪️இரவாகிய நிலையில், குறித்த 3 விவசாயிகளும் வீடு திரும்பாத நிலையில், அவர்களை தேடி உறவினர்கள் சென்றுள்ளனர்.

𝑰𝑻𝑴▪️இதன்போதே, மூவரும் சடலமாக காணப்பட்டதை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.

𝑰𝑻𝑴▪️குறித்த மூன்று விவசாயிகளின் சடலங்களும் அதே விவசாய நிலத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.