இந்தியாவின் கதி இலங்கைக்கும் - எச்சரிக்கும் சுகாதாரப் பணிப்பாளர்.

 இந்தியாவின் கதி இலங்கைக்கும் - எச்சரிக்கும் சுகாதாரப் பணிப்பாளர்.


𝑰𝑻𝑴▪️நாட்டில் நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதிலிருந்து கொவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளமை தெளிவாகிறது. 

𝑰𝑻𝑴▪️அதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்குமாயின் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை இலங்கையிலும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது.

𝑰𝑻𝑴▪️எனவே அந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்கு மக்கள் சார்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

𝑰𝑻𝑴▪️கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

𝑰𝑻𝑴▪️வெள்ளியன்று 1600 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்தியாவில் தற்போதுள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு முன்னாயதங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த நிலைமையை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். ஆனால் அங்குள்ள நிலைமையைப் போன்று ஏற்படக் கூடிய அபாயமும் உண்டு.

𝑰𝑻𝑴▪️எனவே தொற்றுக்கான ஏதேனுமொரு அறிகுறி காணப்படுபவர்கள் அவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்காமல் வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். 

𝑰𝑻𝑴▪️எனினும் ஏதேனுமொரு வகையில் தொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்குமானால் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகிறது.

𝑰𝑻𝑴▪️எனவே இந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்காக மக்கள் அவர்கள் சார்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது மிக முக்கியத்துவமுடையதாகும். வெள்ளியன்று 11 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இலங்கைக்குள்ளும் கொவிட் பரவலானது மிகத் தீவிரமாக அதிகரித்து வருவது தெளிவாகிறது.

𝑰𝑻𝑴▪️தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோர் கடந்த நாட்களில் நுவரெலியா மற்றும் கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றவர்கள் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

𝑰𝑻𝑴▪️எவ்வாறிருப்பினும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் நிலை ஏற்படுமாயின் ஒரு தடுப்பூசியையேனும் வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உலக சுகதார ஸ்தாபனம் ஆலோசனை வழங்கியுள்ளது என்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.