உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார். 


39 மனைவிகள், 89 குழந்தைகள் கொண்ட, உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடைய மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் உடல் நலக் குறைவால் காலமானார். 

வட கிழக்கு மாநிலமான மிசோரமின், பங்தங் டிலாங்நுயம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜியோனா சனா. 76 வயதான இவருக்கு 39 மனைவிகள், 89 குழந்தைகள். 

உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடையவர் என்ற பெருமைக்குரியவர். இவர் உடல் நலக் குறைவால் காலமாகி விட்டதாக அம்மாநில முதலமைச்சர் ஜோரம் தங்கா தெரிவித்துள்ளார். 

இது குறித்து டுவிட்டரில், முதலமைச்சர் ஜோரம் தங்கா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: ஜியோனா சனாவின் குடும்பத்தால் அவர் வசித்த பக்தங் கிராமம் மற்றும் மிசோரம் குறிப்பிடத்தகுந்த வகையில் சுற்றுலாப் பயணிகள் கவனத்தை ஈர்க்கும் இடமாகியது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறன்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.