மட்டக்களப்பு களுதாவளை சிறுவர் இல்லமொன்றில் 22 பேருக்கு கொரோனா..!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

மட்டக்களப்பு களுதாவளை சிறுவர் இல்லமொன்றில் 22 பேருக்கு கொரோனா..! 

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

அவர்களில் 21 சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி இல்லத்தின் சிறுவர்கள் சிலர் காய்ச்சல் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடைய சிறுவர் இல்லத்தின் ஏனையவர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட Antigen பரிசோதனையில் இவ்வாறு கொரோனா தொற்று உறுதியானதாக களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது. இதன்காரணமாக குறித்த சிறுவர் இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.