இலங்கையில் அதிகரித்துள்ள போலி நாணயத்தாள் புழக்கம்!

 

𝑰𝑻𝑴 ✍️ இலங்கையில் தற்போது போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ இதன் காரணமாக போலி நாணயத்தாள்களின் புழக்கத்தை தடுப்பது மற்றும் பொதுமக்களின் கைகளில் சிக்குவதை தடுப்பது தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ மேலும், பண்டிகை நாட்களின் மக்களின் பாதுகாப்பிற்காகவும்,சந்தேகநபர்களை கைது செய்யவும் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

𝑰𝑻𝑴 ✍️ விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

இந்த வேலை திட்டத்திற்காக சீருடை அணிந்த பொலிஸாருக்கு மேலதிகமாக, சிவில் உடையில் பொலிஸார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கடை மற்றும் பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ கொள்ளையர்கள், வாகன திருடர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ மேலும், கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெறும் ஒவ்வொரு தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ இதற்கமைய, வெளியிலுள்ள அதிகாரிகள் மேல் மாகாணத்திற்கு வரவழைக்கப்பட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.