வரலாற்றில் இன்று – 03.09.2023

செப்டம்பர் 3 (September 3) கிரிகோரியன் ஆண்டின் 246 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 247 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 119 நாட்கள் உள்ளன.

📌இன்றைய தின நிகழ்வுகள்

301 – உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது.

1189 – முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1260 – பாலஸ்தீனத்தில் மங்கோலியர்களுடன் இடம்பெற்ற போரில் மாம்லுக்குகள் வெற்றி பெற்றனர். இதுவே மங்கோலியப் பேரரசு அடைந்த முதலாவது தோல்வியாகும்.

1783 – அமெரிக்கப் புரட்சிப் போர் முடிவுக்கு வந்தது. பாரிசில் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா பிரித்தானியாவிடம் இருந்து அதிகாரபூர்வமாக விடுதலை அடைந்தது.

1798 – பெலீசின் கரையில் ஸ்பானியர்களுக்கும் பிரித்தானியருக்கும் இடையில் ஒருவாரப் போர் இடம்பெற்றது.

1801 – இலங்கையில் நெல், மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

1855 – நெப்ராஸ்காவில் அமெரிக்கப் படையினர் சியூ பழங்குடியினரைத் தாக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 100 பேரைக் கொன்றனர்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் கென்டக்கி மீது தாக்குதலைத் தொடுத்தனர்.

1878 – தேம்ஸ் நதியில் “பிரின்சஸ் அலைஸ்” பயணிகள் கப்பல் பைவெல் அரண்மனையுடன் மோதியதில் 640 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

1914 – அல்பேனிய இளவரசன் வில்லியம் பலத்த எதிர்ப்பை அடுத்து ஆறுமாத ஆட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறினான்.

1933 – சோவியத் ஒன்றியத்தின் அதி உயர் புள்ளியான பொதுவுடமை முனையை (7495 மீ) யெவ்கேனி அப்லாக்கொவ் எட்டினார்.

1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான ஜெர்மனியின் முற்றுகையை அடுத்து பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன ஜெர்மனி மீது போர் தொடுத்தன.

1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியை முதல் தடவையாக நேச நாடுகள் முற்றுகையிட்டன.

1971 – கட்டார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1976 – நாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கி செவ்வாயின் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.

2004 – ரஷ்யாவில் பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 344 பேர் கொல்லப்பட்டனர்.

📌 இன்றைய தின பிறப்புகள்

1814 – ஜேம்ஸ் சில்வெஸ்டர், பிரித்தானிய கணிதவியலாளர்

1829 – அடோல்ஃப் ஃபிக், ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் (இ. 1901)

1948 – லெவி முவனவாசா, சாம்பியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் (இ. 2008)

1951 – மைத்திரிபால சிறிசேன, இலங்கை அரசியல்வாதி, 6வது அரசுத்தலைவர்

1976 – விவேக் ஒபரோய், இந்தித் திரைப்பட நடிகர்

📌 இன்றைய தின இறப்புகள்

1658 – ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர் (பி 1599)

1999 – அப்துல் காதர் சாவுல் அமீட், இலங்கை அரசியல்வாதி (பி. 1928)

1999 – இர. ந. வீரப்பன், மலேசிய எழுத்தாளர் (பி. 1930)

2014 – ஏ. பி. வெங்கடேசுவரன், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் (பி. 1930)

📌 இன்றைய தின சிறப்பு நாள்

கட்டார் – விடுதலை நாள் (1971)

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.