வரலாற்றில் இன்று – 28.10.2023

அக்டோபர் 28 (October 28) கிரிகோரியன் ஆண்டின் 301 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 302 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 64 நாட்கள் உள்ளன.

✅இன்றைய தின நிகழ்வுகள்

306 – மாக்செண்டியஸ் ரோமப் பேரரசன் ஆனான்.

312 – முதலாம் கொன்ஸ்டண்டீன் மாக்செண்டியசைத் தோற்கடித்து ரோமப் பேரரசனானான்.

1492 – ஸ்பெயின் நாட்டுக் கடலோடியான கொலம்பசும் அவரது கூட்டத்தினரும் வழி தவறிச் சென்று கியூபாவில் கரை இறங்கினர்.

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டனில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை பிரித்தானியா தடுத்தது.

1834 – சுவான் ஆற்றுக் குடியேற்றத்தில் (தற்போதய மேற்கு அவுஸ்திரேலியாவில்) பழங்குடிகளுக்கும் ஆங்கிலேயக் குடியேற்ற வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பல பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.

1886 – நியூ யார்க்கில் அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லாண்ட் விடுதலைச் சிலையைத் திறந்து வைத்தார்.

1918 – முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரியிடம் இருந்து செக்கொசிலவாக்கியா விடுதலை பெற்றது.

1918 – மேற்கு கலீசியாவில் புதிய போலந்து அரசு அமைக்கப்பட்டது.

1922 – முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் ரோம் நகரை சென்றடைந்து இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி, அல்பேனியா ஊடாக கிறீஸ் நாட்டைக் கைப்பற்றியது. இந்நாள் கிறீசின் “ஓக்கி நாள்” (Όχι=No, இல்லை) ஆக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

1941 – லித்துவேனியாவின் கௌனாஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் 9,000 யூதர்களை சுட்டுக் கொன்று அதே இடத்தில் புதைத்தனர்.

1942 – கனடா முதல் அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

1942 – போலந்தின் கிராக்கொவ் நகரில் இருந்து 2,000 யூத சிறுவர்களும் 6,000 பெரியவர்களும் நாசிகளினால் வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

1948 – சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் போல் முல்லர் டிடிரியைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு பெற்றார்.

1962 – கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்றுவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் அறிவித்தார்.

1971 – ஐக்கிய இராச்சியம் தனது முதலாவது (2007 வரை ஒன்றே ஒன்றுமான) “புரொஸ்பெரோ” என்ற செய்மதியை விண்ணுக்கு ஏவியது.

1972 – முதலாவது ஏர்பஸ் A300 பறக்க விடப்பட்டது.

1985 – சண்டினீஸ்டாவின் டானியேல் ஒர்ட்டேகா நிக்கராகுவாவின் அதிபரானார்.

1985 – மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.

2001 – பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் கண்முடித்தனமாக சுட்டதில் பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

2001 – கேரளாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நாகர்கோயில் பகுதியில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது.

2006 – 1930களில் ரஷ்யக் கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின் பிகீவ்னியா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிக் கிரியைகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன.

2006 – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.

✅ இன்றைய தின பிறப்புக்கள்

1955 – பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர், கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்

1956 – மஹ்மூத் அஹ்மதிநெஜாத், ஈரான் குடியரசுத் தலைவர்

✅ இன்றைய தின இறப்புகள்

1627 – ஜஹாங்கீர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னன் (பி. 1569)

1704 – ஜான் லாக், ஆங்கிலேய தத்துவவியலாளர் (பி. 1632)

1900 – மாக்ஸ் முல்லர், ஜெர்மனிய மொழியியலாளர் (பி. 1823)

1997 – மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், கருநாடக இசை வீணை வாத்தியக்கலைஞர் (பி: 1920)

2014 – மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் அரசுத்தலைவர் (பி. 1937)

✅ இன்றைய தின சிறப்பு நாள்

செக் குடியரசு, சிலவாக்கியா – தேசிய நாள் (1918)

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.