கடுகில் கொட்டி கிடைக்கும் ஏராளமான நன்மைகள்.

கடுகு சமையலில் பயன்படும் ஒரு சிறிய பொருளாகும். இது சமையலில் தாளிப்பிற்கு பயன்படுத்தப்படும்.

கடுகு தோற்றத்தில் சிறிதாக இருந்தாலும் இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் அதிகம். கடுகு எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் பல உடல்நல பிரச்சனைகளிலிருந்து விடைபெறலாம்.

கடுகு எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு சிறந்தது. இவற்றின் மூலம் என்ன மாதிரியான பிரச்சனைகளை சரி செய்யலாம் என்று பார்ப்போம். 

கடுகு  உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது தொற்று, பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக உடலைப் போராட உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டி-செப்டிக் பண்புகள் காரணமாக, காயங்கள் விரைவில் குணமாகும். காயத்தில் இருந்து சீக்கிரம் குணமடைய காயம்பட்ட இடத்தில் கடுகை நன்கு பொடியாகி காயம் உள்ள இடத்தில் தூவலாம்.

பல்வலி தொல்லை ஏற்படும்பொழுது, கடுகு காய்ச்சிய தண்ணீரைக் குடிப்பது அல்லது வாய் கொப்பளிப்பது நல்ல பலனைத் தரும்.

கடுகு மற்றும் கற்பூரத்தை பொடியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து முழங்கால்களில் தடவவும். இவ்வாறு செய்வதால் மூட்டு வலி விரைவில் குறையும்.

கடுகை பொடியாக்கி, சிரங்கு, அரிக்கும் தோலழற்சியில் தடவவும். இப்படி செய்தால் பலன் தெரியும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.