வரலாற்றில் இன்று – 09.12.2023

டிசம்பர் 9 (December 9) கிரிகோரியன் ஆண்டின் 343 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 344 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 22 நாட்கள் உள்ளன.

✅ இன்றைய தின நிகழ்வுகள்

536 – பைசாந்தியத் தளபதி பெலிசாரியசு உரோம் நகரை ஊடுருவினான். கோத்திக்குப் படைகள் தலைநகரை விட்டு வெளியேறின.

1582 – பிரான்சில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 9 இற்குப் பின்னர் நேரடியாக டிசம்பர் 20 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.

1688 – மாண்புமிகு புரட்சி: ரெடிங் சமரில் வில்லியமின் படைகள் யாக்கோபுவின் படைகளைத் தோற்கடித்தன. இரண்டாம் யேம்சு நாட்டை விட்டு வெளியேறினான்.

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படைகள் பெரும் பாலத்தில் நடந்த சமரில் தோல்வியடைந்தன. பிரித்தானியா விரைவில் வர்ஜீனியாவில் இருந்து வெளியேறியது.

1793 – நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் “தி அமெரிக்கன் மினெர்வா” நோவா வெப்சுடரினால் வெளியிடப்பட்டது.

1828 – இலங்கையில் கண்டி வீதி சுரங்கப் பாதை கட்டி முடிக்கப்பட்டது.[1]

1835 – டெக்சசு இராணுவம் சான் அந்தோனியோவைக் கைப்பற்றியது.

1856 – ஈரானிய நகரம் புசேகர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.

1905 – பிரான்சில் அரசையும் கிறித்தவத் தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

1911 – அமெரிக்காவில், டென்னிசி மாநிலத்தில், சுரங்க வெடிப்பில் 84 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1917 – முதலாம் உலகப் போர்: எருசலேம் போர் (1917): பிரித்தானியர் பாலத்தீனத்தின் எருசலேம் நகரைக் கைப்பற்றினர்.

1922 – போலந்தின் முதலாவது அரசுத்தலைவராக கேப்ரியல் நருத்தோவிட்சு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1931 – இரண்டாவது எசுப்பானியக் குடியரசு அமைக்கப்பட்டது.

1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: யப்பானியப் படைகள் சீன நகரான நாஞ்சிங்கைத் தாக்கின.

1940 – இரண்டாம் உலகப் போர்: காம்ப்பசு நடவடிக்கை: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: சீனக் குடியரசு, கியூபா, குவாத்தமாலா, பிலிப்பீன்சு ஆகியன செருமனி, யப்பான் மீது போரை அறிவித்தன.

1946 – இந்திய அரசியலமைப்பை வரைய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் முதல் தடவையாகக் கூடியது.

1948 – இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை ஐநா அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1950 – பனிப்போர்: மன்காட்டன் திட்டம் குறித்த தகவலை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கிய குற்றத்திற்காக அரி கோல்டு என்பவருக்கு 30 ஆண்டுகால சிறைத்தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் வழங்கியது.

1953 – ஜெனரல் எலக்ட்ரிக் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்டுகள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.

1956 – கனடாவின் விமானம் ஒன்று பிரிட்டிசு கொலம்பியாவில் வீழ்ந்ததில் 62 பேர் உயிரிழந்தனர்.

1961 – பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.

1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய பாதுகாப்பை மீறி இந்திய வான்படை இந்தியத் தரைப்படைத் தொகுதியினரைத் தரையிறக்கியது.

1973 – வட அயர்லாந்து அதிகாரப் பகிர்வு தொடர்பான ஒப்பந்தம் பிரித்தானிய, அயர்லாந்து அதிகாரிகளுக்கிடையே கையெழுத்திடப்பட்டது.

1979 – பெரியம்மை தீ நுண்மம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.

1986 – இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

1987 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: முதலாவது பாலத்தீன எழுச்சி காசாக்கரை, மேற்குக் கரை பகுதிகளில் ஆரம்பமானது.

1992 – அமெரிக்கப் படைகள் சோமாலியாவில் தரையிறங்கின.

1992 – வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.

2003 – மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், பல காயமடைந்தனர்.

2006 – மாஸ்கோவின் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.

2016 – மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள்: வடகிழக்கு நைஜீரியாவில் சந்தை ஒன்றில் பள்ளி மாணவிகள் இருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டனர், 177 பேர் காயமடைந்தனர்.

✅இன்றைய தின பிறப்புகள்

1579 – மார்டின் தெ போரஸ், பெருவின் புனிதர் (இ. 1639)

1594 – சுவீடனின் கஸ்டாவஸ் அடால்பஸ் (இ. 1632)

1608 – ஜான் மில்டன், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1674)

1742 – காரல் வில்லெம் சீலெ, சுவீடன்-செருமானிய வேதியியலாளர்

1868 – பிரிட்சு ஏபர், நோபல் பரிசு பெற்ற போலந்து-செருமானிய வேதியியலாளர் (இ. 1934)

1870 – ஐடா இசுகட்டர், இந்திய மருத்துவர், மதப்பரப்புனர் (இ. 1960)

1881 – ரிச்சர்ட் லயனல் ஸ்பிட்டெல், இலங்கை மருத்துவர், எழுத்தாளர் (இ. 1969)

1906 – கிரேசு ஹாப்பர், அமெரிக்க கணினியியலாளர் கோபால் நிரலாக்க மொழியை உருவாக்கியவர் (இ. 1992)

1913 – ஓமாயி வியாரவாலா, இந்தியப் புகைப்படக் கலைஞர் (இ. 2012)

1917 – கே. பி. ஜானகி அம்மாள், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1992)

1919 – வெ. தட்சிணாமூர்த்தி, இந்திய திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2013)

1919 – எ. கி. நாயனார், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2004)

1927 – பி. எஸ். மணிசுந்தரம், இந்தியக் கல்வியாளர், கணினி அறிவியலாளர் (இ. 2013)

1929 – பாப் ஹாக், ஆத்திரேலியாவின் 23-வது பிரதமர் (இ. 2019)

1930 – சுப. சதாசிவம், தமிழக எழுத்தாளர்

1934 – சூடி டென்ச், ஆங்கிலேய நடிகை

1936 – கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, இலங்கை கத்தோலிக்க ஆயர்

1943 – நேசமணி ஜோன், மலேசிய எழுத்தாளர்

1946 – சோனியா காந்தி, இத்தாலிய-இந்திய அரசியல்வாதி

1954 – ழான்-குளோடு சுன்கர், லக்ச்ம்பர்க் பிரதமர்

1978 – ஜெசி மெட்காஃப், அமெரிக்க நடிகர்

1981 – மார்டி ஃபிஷ், அமெரிக்க டென்னிசு வீரர்

1981 – தியா மிர்சா, இந்திய நடிகை

2022 -  தகி உஸ்மான் - IT MEDIA உரிமையாளர் அர்ஷத் தாஹிரின் மகன் 

✅ இன்றைய தின இறப்புகள்

1048 – அல்-பிருனி, பாரசீகக் கணிதவியலாளர் (பி. 973)

1669 – ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (பி. 1600)

1761 – தாராபாய், மராட்டிய அரசி (பி. 1675)[2]

1937 – நில்சு குஸ்டாப் டேலன், நோபல் பரிசு பெற்ற சுவீடிய இயற்பியலாளர் (பி. 1869)

1932 – பேகம் ரோக்கியா, வங்காளதேச சமூகப் பணியாளர், நூலாசிரியர் (பி. 1880)

1937 – நில்சு குஸ்டாப் டேலன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் இயற்பியலாளர் (பி. 1869)

1979 – ஃபுல்டன் ஜான் ஷீன், அமெரிக்கப் பேராயர் (பி. 1895)

1989 – மதுரை சோமு, தமிழகக் கருநாடக இசைப் பாடகர் (பி. 1919)

1991 – பெரினிசு ஆபாட், அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் (பி. 1898)

1997 – சிவராம காரந்த், கன்னட எழுத்தாளர் (பி. 1902)

2006 – சு. வில்வரத்தினம் ஈழத்துக் கவிஞர் (பி. 1950)

2018 – இரிக்கார்டோ ஜியாக்கோனி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1931)

✅இன்றைய தின சிறப்பு நாள்

விடுதலை நாள் (தன்சானியா, பிரித்தானியாவிடம் இருந்து 1961)

பன்னாட்டு ஊழலுக்கு எதிரான நாள்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.